புங்குடுதீவு - கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் றீச்ஷாவின் சுவைமிகு சுவையூற்று விருந்தகம்(Video)
புங்குடுதீவு - கண்ணகி அம்மன் ஆலய தேவஸ்தான மகா கும்பாபிஷேக நிகழ்வுகள் நேற்றைய தினம்(22.06.2023) ஆரம்பமானது.
புங்கையூரில் வீற்றிருந்து உலகலெல்லாம் பரந்துவாழும் எம்மை வளமுடன் வாழவைக்கும் நாயகி ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாளுக்கு புனராவர்த்தன அஷ்டபந்தன சமர்ப்பண ஏகோன்ன பஞ்சாசத் (49) குண்டபஷ மகாயாக மகா கும்பாபிஷேக பெருவிழா எதிர்வரும் 25.06.2023 அன்று நடைபெறவுள்ளது.
இந்நிலையில் கிளிநொச்சி, இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்ஷா ஒருங்கிணைந்த பண்ணை நிறுவனத்தின் ஏற்பாட்டில் ''சுவைமிகு சுவையூற்று'' விருந்தகம் ஒன்று புங்குடுதீவு - கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த விருந்தகத்தில் பக்தர்கள் இளைப்பாறுவதற்கான வசதியும் நிறுவனத்தின் ஏற்பாட்டில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
புங்குடுதீவு - கண்ணகி அம்மன் ஆலய தேவஸ்தான மகா கும்பாபிஷேகதின் எண்ணைக் காப்பு நிகழ்வானது நேற்றைய தினமும்(22), இன்றைய தினமும்(23.06.2023) காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரை நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 12 மணி நேரம் முன்
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri