தமிழர் பகுதியில் புலம்பெயர் தமிழரின் மற்றுமொரு புதிய முயற்சி (Video)
கிளிநொச்சி- பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஓர் சுற்றுலாதலமே றீ(ச்)ஷா பண்ணை ஆகும்.
றீ(ச்)ஷா பண்ணை பல ஆயிரக்கணக்கிலான தென்னை மரங்கள் சூழ மிக அழகாக காட்சியளிக்கும் பண்ணையாகும்.
இந்த றீ(ச்)ஷா பண்ணையில் தற்போது 'கோகுலம்' என்ற பகுதியில் பாரிய அளவில் இயற்கை முறையில் மரக்கறி பயிர்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.
தமிழர் பகுதியில் விவசாயத்தின் ஊடாக ஓர் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியின் அடுத்த கட்டமாக இயற்கை முறையில் மரக்கறி பயிர்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |