இலங்கையில் 10 ஆண்டுகளுக்கு பின் புதுப்பிக்கப்பட்ட சிவப்பு தரவு புத்தகம்!
இலங்கையில் அழிந்து வரும் விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் குறித்த சிவப்பு தரவு புத்தகத்தின் புதிய பதிப்பை தயாரிப்பதை சுற்றுச்சூழல் அமைச்சகம் நிறைவுசெய்துள்ளது.
இது ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் தொகுக்கப்படுகிறது. இலங்கையில் கடைசியாக ஒரு சிவப்பு தரவு புத்தகம் 2012 இல் வெளியிடப்பட்டது.
ஒரு வருடத்திற்கு முன்னர் அமைச்சர் மஹிந்த அமரவீர சுற்றுச்சூழல் அமைச்சராகப் பொறுப்பேற்றபோது, அமைச்சகத்தின் அதிகாரிகளுக்கு சிவப்பு தரவு புத்தகத்தை விரைவில் தொகுக்குமாறு அறிவுறுத்தினார்.
அவரது வழிகாட்டுதலின் படி, சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பல்லுயிர் பிரிவு, சிவப்பு தரவு புத்தகத்தை நிறைவு செய்துள்ளது. சிவப்பு தரவு புத்தக வகைப்பாடு ஒன்பது பிரிவுகளைக் கொண்டுள்ளது.
இந்நிலையில், புதிய பதிப்பு வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை அமைச்சரின் தலைமையில் அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க பங்கேற்பில் நடைபெற உள்ளது.

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை தாக்கும் ஈரான்? பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள் News Lankasri

ஈரானின் எச்சரிக்கை., B-2 பாம்பர் விமானங்களை அனுப்பும் அமெரிக்கா - புதிய கட்டத்திற்கு செல்லும் மோதல் News Lankasri
