பழங்குடியின பள்ளியிலிருந்து 215 குழந்தைகளின் எச்சங்கள் மீட்பு
பல நாட்கள் அழுத்தத்திற்கு பின்னர், ஒட்டாவாவில் அமைந்துள்ள பாராளுமன்றத்தின் அமைதிக் கோபுரம் உட்பட அனைத்து கூட்டாட்சி கட்டிடங்களிலும் தேசிய கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டுள்ளார்.
கனடாவின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பிரிட்டிசு கொலம்பியா இந்த வாரம் 215 குழந்தைகளின் எச்சங்கள் பழைய காம்ப்லூஸ் இந்தியன் குடியிருப்பு பள்ளி தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் செயல்பட்டு வந்த காம்ப்லூஸ் இந்தியன் குடியிருப்பு பள்ளி எனப்படும் மிகப்பெரிய பழங்குடியின குழந்தைகள் தங்க வைக்கப்பட்டிருந்த பள்ளியில், கண்டுபிடிக்கப்பட்டுள்ள எரிந்த சடலங்கள் பழங்குடி மக்களுடைய சடலங்கள் தான்” என Tk'emlúps te Secwépemc பழங்குடியினர் தலைவர் ரொசன்னா கசிமிர் உறுதிபடுத்தியுள்ளார்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இப்படிக்கு உலகம் தொகுப்பு,