மீன்பிடிக்க சென்ற ஆண் ஒருவர் சடலமாக மீட்பு
வவுனியா - ஈரப்பெரியகுளம் குளத்திற்கு மீன் பிடிப்பதற்காகத் தனது வீட்டில் இருந்து சென்ற ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இன்று (04.12) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த குளத்தில் மீன் பிடிப்பதற்காகக் காலையில் இருவர் சென்றிருந்தனர்.
அங்கு மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் தனக்கு இயலாமல் இருப்பதாகக் கூறி குளத்திலிருந்து வெளியே சென்றுள்ளார்.
மற்றைய நபர் மீன் பிடித்து முடிந்ததும் குளத்திலிருந்து வெளியே வந்து வீடு நோக்கிச் சென்ற போது கூட வந்தவர் குளத்து ஒழுங்கை ஒன்றில் மரணித்த நிலையில் காணப்பட்டதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வவுனியா - கல்நாட்டியகுளம், மதுரா நகர்ப் பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய செல்வராசா ஜலகுலசராசா இன்பரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் குறித்து
ஈரப்பெரியகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri