தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு
திருகோணமலை-முதலியார்குளம் குளத்துக்கு அருகில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்றிரவு (17) இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் அனுராதபுரம்- விகார ஹல்மில்லகுளம்-பியந்த மாவத்தையை சேர்ந்த அமரதுங்க ஆராய்ச்சிக்கே மது சம்பத் பிரசாத் குமார (24வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை மின்சார சபையில் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றி வரும் இவர், குடும்பத்தகராறு காரணமாக அவர் கடமையாற்றிக் கொண்டிருந்த இடத்துக்கு முன்னாலுள்ள குளத்துக்கு அருகில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு திருகோணமலை திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எஸ்.எம்.றூமி வருகை தந்து சடலத்தை பார்வையிட்ட தாகவும் மரணத்தில் எதுவித சந்தேகமும் இல்லை என உறவினர்கள் பொலிசாரிடம் கூறியதை அடுத்து விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக் கப்பட்ட தாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
