தனிமையிலிருந்த பெண் வீட்டிலிருந்து சடலமாக மீட்பு
பாணந்துறை, வேகட பிரதேசத்திலுள்ள வீடொன்றில் தனிமையில் வசித்துவந்த வயோதிபப் பெண் ஒருவர் அவ்வீட்டினுள் இருந்தது சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இப்பெண், தனது வீட்டினுள் கதிரையொன்றில் விழுந்துகிடப்பதைக் கண்ட அயலவர் ஒருவர் காவல்துறைக்கு அறிவித்ததையடுத்து, அவ்விடத்துக்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் பொதுசுகாதார பரிசோதகர்கள் ஒன்றிணைந்து சடலத்தை கைப்பற்றி பாணந்துறை வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
நேற்றைய தினம் இவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளதுடன், உயிரிழந்தவர் 85 வயதான பெண் ஒருவர் என்றும் தெரியவந்துள்ளது.
மேற்படி வயோதிபப் பெண் கடந்த மூன்று நாட்களாக குறித்த வீட்டினுள் தனிமையில் இருந்துள்ள நிலையில்,கோவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண்ணின் சரீரம் பாணந்துறை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளதுடன், தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகளுக்கமைய, சரீரத்தை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam