பிரபல ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் ஹோட்டலிலிருந்து சடலமாக மீட்பு
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் குறித்த ஹோட்டலிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று காலை மட்டக்களப்பு பார் வீதியில் உள்ள ஹோட்டல் அறையொன்றிலிருந்தே குறித்த உரிமையாளர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காலையில் உரிமையாளர் எழுந்திருக்காத நிலையில் ஊழியர்கள் ஹோட்டல் அறையினை திறந்தபோது அவர் உயிரிழந்த நிலையிலிருந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த ஹோட்டல் உரிமையாளர் கோட்டைக்கல்லாறை சேர்ந்தவர் எனவும் புலம்பெயர்நாடு ஒன்றிலிருந்து வருகைதந்து ஹோட்டல் ஒன்றை நடாத்தி வருவதாகவும் தெரியவருகின்றது.
இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.