பூநகரியில் விசேட சோதனை நடவடிக்கை: கேரள கஞ்சா மீட்பு
பூநகரி - கௌதாரி முனை பகுதியிலிருந்து கேரள கஞ்சாவும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் இன்று (திங்கட்கிழமை) பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் இராணுவப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், பூநகரி பொலிஸாருடன் இணைந்து முன்னெடுத்த விசேட நடவடிக்கையில் 80 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது மோட்டார் சைக்கிள் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸாரும், விசேட அதிரடிபடையினரும் விசாரணை
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸாரும், விசேட அதிரடிபடையினரும் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மேலதிக தகவல் - யது

கடைசி டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ்! நீ உன் தேசத்திற்கு உண்மையான சேவகன் - ரோஹித் ஷர்மா பிரியாவிடை News Lankasri

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிப்பவர்கள் யார் யார் பாருங்க Cineulagam

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க Cineulagam
