பூநகரியில் விசேட சோதனை நடவடிக்கை: கேரள கஞ்சா மீட்பு
பூநகரி - கௌதாரி முனை பகுதியிலிருந்து கேரள கஞ்சாவும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் இன்று (திங்கட்கிழமை) பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் இராணுவப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், பூநகரி பொலிஸாருடன் இணைந்து முன்னெடுத்த விசேட நடவடிக்கையில் 80 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது மோட்டார் சைக்கிள் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸாரும், விசேட அதிரடிபடையினரும் விசாரணை
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸாரும், விசேட அதிரடிபடையினரும் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மேலதிக தகவல் - யது
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 2 மணி நேரம் முன்
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri