யாழ். தெல்லிப்பழை நடேஸ்வரா கல்லூரி வீதியின் புனரமைப்பு
மறுமலர்ச்சிக்கான பாதை திட்டத்தின் கீழ், கிராமப்புற வீதிகள் மற்றும் பாலங்களுக்காக வேலை திட்டத்தின் ஒரு கட்டமாக தெல்லிப்பழை நடேஸ்வரா கல்லூரி வீதியின் புனரமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ. 14 பில்லியன் நாடு முழுவதும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இத் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், தீவு முழுவதும் 57 கிராமப்புற சாலைகளில் பணிகள் இன்று தொடங்கும் என்றும், மீதமுள்ள சாலைகள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. .
நடேஸ்வரா கல்லூரி வீதி
குறித்த நடேஸ்வரா கல்லூரி வீதியானது 1200 மீட்டர் நீளமுள்ள வீதியை 35 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
வீதிக்கான ஆரம்ப வேலைகளை நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் பாவானந்தராஜா ஆரம்பித்து வைத்தார்.
நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர்,வீதி அவர்களுக்கு அதிகார சபையின் திணைக்கள அதிகாரிகள் செயலாளர் உள்ளிட்டபிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






மகனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்னுடன் காதல் - வருங்கால மருமகளை திருமணம் செய்யும் மாமனார் News Lankasri

ஈரானின் எச்சரிக்கை., B-2 பாம்பர் விமானங்களை அனுப்பும் அமெரிக்கா - புதிய கட்டத்திற்கு செல்லும் மோதல் News Lankasri
