மின்சார துண்டிப்பு நாசவேலையாக இருக்கலாம்! பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு!
நாசவேலை
நாட்டின் பல பகுதிகளில் இன்று காலை மின்சாரம் தடைப்பட்டமை, நாசவேலையாகவே கருத முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் தமது சிறப்புரிமைகளை தவறாகப் பயன்படுத்துகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொது மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தாத வகையில் தொழிற்சங்கங்கள் எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையிலும் அல்லது பணிப்புறக்கணிப்பிலும் ஈடுபடுவதற்கு சுதந்திரம் உள்ளது.
அத்துடன் தொடர்ந்து தடையில்லா மின்சாரம் வழங்கும் பொறுப்பை, இலங்கை மின்சாரசபை கொண்டுள்ளது.
இந்தநிலையில் நிலக்கரியில் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்கள் உட்பட சில மின்சார உற்பத்தி நிலையங்கள் இயங்கி வருகின்றன.
மின்சார உற்பத்தி நிலையங்கள்
மேலும் சில சிறிய மற்றும் பெரிய நீர் மின்சார உற்பத்தி நிலையங்களான லக்சபான, கனியன், விமலசுரேந்திர மற்றும் பொல்பிட்டிய ஆகியவற்றின் மின்சாரத்தை தேசிய கட்டத்துடன் இணைக்கப்படவில்லை.
எனவே நிலைமை சீராகும் வரை மின்சார பயன்பாட்டாளர்கள் அமைதியை கடைப்பிடிக்கவேண்டும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க கேட்டுள்ளார்.





அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri
