ரீபில்டிங் சிறிலங்கா நிதியம் சட்டப்பூர்வமானதா!வெளிவந்த பரபரப்பான தகவல்கள்
'டித்வா' சூறாவளிக்குப் பின்னர் நாட்டை மீள கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் உருவாக்கிய ரீபில்டிங் சிறிலங்கா ‘Rebuilding Sri Lanka’ நிதியம் உண்மையில் இருக்கிறதா?
அல்லது அது வெறும் விளம்பர முயற்சியா? என பிபிசி வெப்தளம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் மேற்கொண்ட தகவல் அறிதலில் ஜனாதிபதி அலுவலகமும் நிதி அமைச்சும் வழங்கிய பதில்கள் பல சர்ச்சைகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
பிபிசியின் RTI வெளிப்படுத்திய நிதியின் உண்மை நிலையை காட்டும் 8 முக்கிய அம்சங்கள்:
ஜனவரி 23ஆம் திகதி பிபிசி வெப்தளம் சமர்ப்பித்த RTI கோரிக்கைக்கு பெப்ரவரி 24ஆம் திகதி கிடைத்த பதில்களின் அடிப்படையில் பின்வரும் விடயங்கள் வெளிவந்துள்ளன:
ரீபில்டிங் சிறிலங்கா நிதியத்திலுள்ள சிக்கல்கள்
‘Rebuilding Sri Lanka’ நிதியம் தங்களுக்கு கீழ் இல்லை, அது ஜனாதிபதி அலுவலகத்தின் பொறுப்பில் உள்ளது என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கான ஒரு நிதியம் உருவாக்கப்பட்டதா என கேட்டபோது, “தேவையான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன” என ஜனாதிபதி அலுவலகம் பதிலளித்துள்ளது.
அதாவது, மூன்று மாதங்கள் கடந்தும் சட்டபூர்வமாக நிதியம் நிறுவப்படவில்லை.
நாட்டில் நிறுவப்பட்டுள்ள அனர்த்த முகாமைத்துவச் சட்டத்திற்கு பதிலாக, புதிய நிதிக்காக தனி மசோதா தயாரிக்கப்படுவதாக அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

சட்ட அடிப்படையின்றி பொதுமக்கள் நிதி திரட்டுவது கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. நிதி இன்னும் நிறுவப்படாததால், அதற்கான கணக்காய்வு நடைமுறை குறித்த தெளிவான பதில் அரசிடம் இல்லை.
இணையதளத்தில் பில்லியன் கணக்கில் நிதி காட்டப்பட்டாலும், RTI பதிலில் சரியான நிதி எவ்வளவு என வழங்கப்படவில்லை. ஜனாதிபதி ஊடக பிரிவு “முகாமைத்துவ குழு” பற்றி கூறியிருந்தாலும், RTI பதிலில் குழு நியமிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எங்களின் தகவல் கோரிக்கையை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சிக்கே அனுப்பியிருந்தோம்.ஆனால் 2026 ஜனவரி 30ஆம் திகதி கிடைத்த பதலில், ‘Rebuilding Sri Lanka’ நிதியம் தொடர்பான தகவல்கள் ஜனாதிபதி அலுவலகத்தின் பொறுப்புப் பரப்பில் உள்ளன என பதில் அனுப்பியிருந்தது.
அதனால், அந்த தகவல் கோரிக்கை ஜனாதிபதி செயலாளர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் தெளிவாகத் தெரியவருவதாவது, ‘Rebuilding Sri Lanka’ என்ற நிதி நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இல்லை என்பதே ஆகும்.
சூடுபிடிக்கும் கள நிலவரம்: முக்கிய இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் - ஈரான் ஜனாதிபதி தொடர்பில் வெளியான தகவல்
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 20 மணி நேரம் முன்
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு; விவாகரத்துக்கு காரணமே இதுதான் - குற்றச்சாட்டுகளை அடுக்கிய சங்கீதா News Lankasri
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri