வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பாரிய வீழ்ச்சியின் பின்னணி
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலை மற்றும் அதன் காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்தமையே இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமைக்கான பிரதான காரணம் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த ஆளுநர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
எண்ணெய் இறக்குமதிக்கான அந்நிய செலாவணித் தேவை அதிகரித்துள்ளதால், ரூபாயின் மதிப்பு மீது அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை ரூபாவின் வீழ்ச்சி
2026 ஆம் ஆண்டில் இலங்கை ரூபாய் 4.8 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், இந்திய ரூபாய் 6.4 சதவீதத்தாலும், நேபாள ரூபாய் 6.2 சதவீதத்தாலும், இந்தோனேசிய நாணயம் 5.2 சதவீதத்தாலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த வீழ்ச்சி நிலைமை இலங்கைக்கு மட்டுமல்ல ஏனைய நாடுகளில் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எண்ணெய் இறக்குமதியில் பெருமளவில் தங்கியுள்ள பல நாடுகளுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
2022 ஆம் ஆண்டில் இலங்கை ரூபாய் கடுமையாக வீழ்ச்சியடைந்தமைக்கு நாட்டில் நிலவிய குறிப்பிட்ட பொருளாதாரப் பிரச்சினைகளே காரணமாகும்.
தற்போதைய சூழ்நிலை அதிலிருந்து வேறுபட்டு சர்வதேச சந்தையின் தாக்கங்களுடன் தொடர்புடையதாக மாறியுள்ளது.
நாணய மாற்று விகிதத்தின் மாற்றங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தீர்மானிப்பது தவறு என மத்திய ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri