திருமதி உலக அழகி பட்டத்தை ஒப்படைக்கத் தயார்! - கரோலின் ஜூரி அறிவிப்பு
2020ம் ஆண்டுக்கான திருமதி உலக அழகுராணி பட்டத்தை வென்ற கரோலின் ஜூரி தனது அழகுராணி பட்டத்தை ஒப்படைக்கத் தயார் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
அண்மையில் கொழும்பில் திருமதி இலங்கை அழகுராணி போட்டி நடைபெற்ற போது ஏற்பட்ட சர்ச்சைகளின் தொடர்ச்சியாக கரோலின் தனது உலக அழகுராணி பட்டத்தை மீள ஒப்படைக்கத் தயார் என குறிப்பிடடுள்ளார்.
திருமதி இலங்கை அழகுராணி போட்டியில் வெற்றியாளராக புஷ்பிகா டி சில்வா அறிவிக்கப்பட்டு மகுடம் சூட்டப்பட்டது,
எனினும் இவர் விவகாரத்து பெற்றுக் கொண்டவர் என்பதனால் வெற்றியாளராக அறிவிக்கப்பட முடியாது எனக் கூறி கரோலின் அந்த மகுடத்தை இரண்டாம் இடம்பெற்றவருக்கு சூட்டினார்.
எனினும், இந்த விவகாரம் உலக ஊடகங்களில் பேசப்படும் அளவிற்கு பூதாகாரமாக மாறியது. இந்த நிலையில் நேற்றைய தினம் கரோலின் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
தாம் மேடையில் நேர்மையாகவே செயற்பட்டதாகவும், யாருக்கும் பக்கச்சார்பாக செயற்படவில்லை என கரோலின் தெரிவித்துள்ளார்.
அனைத்து போட்டியாளர்களுக்கும் சம சந்தர்ப்பங்கள் கிடைக்க வேண்டும் என்பதே தமது இலக்கு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாம் எப்போழுது நியாயத்திற்காக மட்டும் குரல் கொடுப்பதாகவும் போட்டி விதிகளின் குறைபாடுகளுக்குள் புகுந்து வெற்றியீட்டியதாக அறிவிப்பது நியாயமானதல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாம் இந்த மகுடத்தை துறக்கத் தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அனைத்து பெண்களுக்கும் சம சந்தர்ப்பம் கிடைக்கப் பெற வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார்.