மூன்றாம் உலக போருக்கு தயாராகுங்கள்! இங்கிலாந்து இராணுவ வீரர்களுக்கு உத்தரவு
உக்ரைன் - ரஷ்யா போர் 117 ஆவது நாளாக நீடித்து வரும் நிலையில், ரஷ்யாவுக்கு உக்ரைன் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்நிலையில்,மூன்றாம் உலக போருக்கு தயாராகுமாறு இங்கிலாந்து இராணுவ வீரர்களுக்கு அந்நாட்டு இராணுவம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து இராணுவ வீரர்களை உடனடியாக போருக்கு தயாராகுமாறு இங்கிலாந்து இராணுவ அதிகாரி ஜெனரல் சர் பேட்ரிக் சான்டர்ஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஏற்கனவே மூன்றாம் உலக போர் தொடங்கி விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ள நிலையில், தற்போது இங்கிலாந்து அரசின் இந்த அறிவிப்பு பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.