123 பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வற் வரி! காரணத்தை வெளியிட்ட அமைச்சர்
நிதி நெருக்கடி காரணமாக வற் வரிக்கு உட்படாத 123 பொருட்களுக்கு மீண்டும் வரி விதிக்க வேண்டியிருந்தது என கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வற் வரி
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,''கடந்த அரசாங்கங்களின் குறுகிய நோக்குடைய நடவடிக்கைகள் காரணமாக அவ்வப்போது வற் (VAT) வரியை அதிகரிக்க வேண்டியிருந்தது.
மறைமுக வரிகளைக் குறைத்து நேரடி வரிகளை விதிப்பதே எங்கள் அரசாங்கத்தின் கொள்கை. தற்போதைய நிலைமை வரி வசூலின் திறமையின்மை.
உலகப் பொருளாதாரத்தை பற்றிப் பேசும் யாரும் இந்த வற் (VAT) வரியை திறமையாக வசூலிக்கும் திறன் பற்றி பேசவில்லை.
டிஜிட்டல் சேவை
எமது இலக்கு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதமாக உயர்த்துவதாகும். டிஜிட்டல் சேவைகளுக்கு VAT வரியை அறிமுகப்படுத்தினோம்.
அது நல்லதா கெட்டதா என்று சொல்ல எதிர்க்கட்சியினருக்கு தைரியம் கூட இல்லை.
மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் சிறு மற்றும் நடுத்தர தொழிலதிபர்கள் கடுமையான பின்னடைவைச் சந்தித்துள்ளனர். இது கடந்த கால செயல்பாடுகளால் ஏற்பட்டது.''என கூறியுள்ளார்.