பரதநாட்டிய போட்டி! திருகோணமலை பாடசாலை மாணவர்களுக்கு குவியும் பாராட்டு(Photo)
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான வலயமட்ட பரதநாட்டிய போட்டி திருகோணமலையில் நடைபெற்றுள்ளது.
இந்த போட்டியானது திருகோணமலை மெதடிஸ்த பெண்கள் கல்லூரியில் நேற்று (15.08.2023) நடைபெற்றுள்ளது.
இதில் கிராமிய நடனம் - தப்பு நடனத்தில் திருகோணமலை மாவட்டம் கன்னியா இராவணேஸ்வரன் தமிழ் வித்தியாலயம் வலய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.
குவியும் பாராட்டுக்கள்
இப்போட்டியில் பங்கு பற்றிய பாடசாலை மாணவர்களுக்கும் நடனம் பயிற்றுவித்த நடன ஆசிரியை, பாடல் பாட உதவிய சங்கீத ஆசிரியர், பாடசாலை அதிபர் உள்ளிட்ட அனைவருக்கும் கல்விச் சமூகத்தினர் தமது வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

இதில் அப்பாடசாலையில் தரம் 9இல் கல்வி பயிலும் கமல்ராஜ், பிராசன், காண்டீபன், சோன்ஜன், கெங்காதரன், அபிசேக், தரம் 10இல் கல்வி பயிலும், சிவகுமார், டிசாந்த், செல்வராஜா, நிவேதிகா, கைலைநாதன் கரணி, தரம் 11 இல் கல்வி பயிலும் செல்வரட்ணம் ஷரணி, ஸ்ரலின் திவ்யா, ஆகிய மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
மேலும் இதற்கான இசை வாத்தியத்தை தரம் 9 இல் கல்வி பயிலும் சந்திரமோகன் லவர்சன் மற்றும் 11ஆம் தரத்தில் கல்வி பயிலும் கைலாயபிள்ளை வினோஜன் ஆகிய மாணவர்கள் மேற்கொண்டு வெற்றி பெற்றுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 19 மணி நேரம் முன்
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri