நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டதாக எவ்வாறு கூற முடியும் : ஹர்ஷ டி சில்வா
நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டதாக எவ்வாறு கூற முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா(Harsha de Silva) கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுள்ளதாக நிதி நிலைமை தரப்படுத்தல் நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச இறையாண்மை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டதாக கூறி வருகிறார்.
பொருளாதாரம் மற்றும் நிதி நிலை, கடன் தொடர்பில் தர நிர்ணயங்களை மேற்கொள்ளும் முகவர் நிறுவனங்கள் வங்குரோத்து நிலை குறித்து அறிவிக்க வேண்டும்.

இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதற்கு ரிப்பள் சீ ரேடிங் (மூன்று சீ தரப்படுத்தல்) இருக்க வேண்டும். சர்வதேச இறையாண்மை பிணைதாரர்களுடன் இலங்கை இன்னமும் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ளவில்லை.
இவ்வாறான பின்னணியில் நாடு எவ்வாறு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டது என கேள்வி எழுப்பியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri