அஞ்சல் மூல வாக்களிப்பு வீதம் அதிகரிப்பு
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், அஞ்சல் மூல வாக்களிப்பு வீதம் கடந்த இரண்டு நாட்களாக அதிகளவில் பதிவாகியுள்ளதாக பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், கடந்த இரண்டு தினங்களில் 80 வீதத்திற்கும் அதிகமானோர் அஞ்சல் மூலம் வாக்களித்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாவது நாள்
தகவல்களின்படி, முதல் நாளிலும், இன்றும் அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் பயன்படுத்தப்பட்டதை அவதானிக்க முடிந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.
2024 ஜனாதிபதித் தேர்தலில் மொத்தம் 712,319 வாக்காளர்கள் அஞ்சல் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இதன்படி, ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று நடைபெற்றது.
இதேவேளை, கடந்த மூன்று நாட்களுக்குள் வாக்களிக்க முடியாத அஞ்சல் மூல வாக்காளர்கள் எதிர்வரும் செப்டெம்பர் 11 அல்லது 12ஆம் திகதிகளில் அந்தந்த மாவட்ட செயலகத்தில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
