விவசாயிகளின் எதிரி “எலி காய்ச்சல்”அபாயத்தை உணராது பலியாகும் உயிர்கள் (VIDEO)
இலங்கையின் - இரத்தினப்புரி மாவட்டத்தில் விவசாயம் உள்ளிட்ட நிலத்துடன் தொடர்புடைய தொழில்களை வாழ்வாதாரமாகக் கொண்ட பலரும் எலிக்காய்ச்சல் அச்சத்திலேயே தமது அன்றாட கடமைகளில் ஈடுபடுகின்றனர்.
13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புக்களையும், ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு பாதிப்பினையும் கோவிட்-19 இலங்கையில் ஏற்படுத்தியுள்ள நிலையில், மறுபுறம் எலிக்காய்ச்சல் இலங்கையில் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது. எனினும் கோவிட்-19 தொற்றின் வீரியம், எலிக்காய்ச்சல் குறித்த அவதானத்தை தடுத்துள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில், ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் 19 சுகாதாரப் பிரிவுகளில் 344 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 5 மரணங்களும் பதிவாகியுள்ளன. பெல்மடுல்ல, நிவித்திகல, கலவான, கிரிஎல்ல மற்றும் எல்பாத ஆகிய பொது சுகாதார வைத்திய அதிகார பிரிவுகளில் எலிக்காய்ச்சலால் 5 மரணங்கள் பதிவாகியுள்ளன.
பலாங்கொடை பிரதேசத்திலேயே அதிகளவானோர் இனங்காணப்பட்டுள்ளனர். குறித்த பிரிவில் 35 பேர் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வருடமும் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் அதிகம் இனங்காணப்பட்ட மாவட்டமாக இரத்தினபுரி மாவட்டமே பதிவாகியுள்ளது.
இரத்தினப்புரி இரத்தினக்கல் அகழ்வு மற்றும் வியாபாரத்திற்கு உலக புகழ்பெற்ற இடம் என்றாலும், அந்த மாவட்டத்தில் விவசாயமும் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரமாக காணப்படுகின்றது.
இரத்தினபுரி மாவட்டம் வருடாந்தம் சராசரியாக 50 ஆயிரம் மெற்றிக்தொன் அரிசியை உற்பத்தி செய்கிறது. அதனைவிட பயறு உள்ளிட்ட வேறு பயிர்களும் செய்கைப் பண்ணப்படுகின்றன.இவ்வாறு விவசாயத்தில் ஈடுபடும் மக்களே எலிக்காய்ச்சலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பிலான விரிவான தகவல்களை காணொளியில் காணலாம்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் தந்த பெருவலி 11 மணி நேரம் முன்

சூரியனால் இந்த 4 ராசிக்கும் மின்னல் வேகத்தில் பணம் தேடி ஓடி வர போகுது...உங்க ராசி இதுல இருக்கா? Manithan

கோலிவுட் திரையுலகமே எதிர்பார்க்கும் விக்ரம் படத்தின் கதை இது தான் ! கொண்டாடப்போகும் ரசிகர்கள்.. Cineulagam

விடுதலையான பேரறிவாளன்! மகனை கட்டிபிடித்து இனிப்பு ஊட்டி கொண்டாடிய தாய் அற்புதம்மாள் வீடியோ News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022