இலங்கையில் வேகமாக பரவும் தொழுநோய்!
இலங்கையில் வேகமாக தொழுநோய் பரவி வருவதாக தேசிய தொழுநோய் பிரசார பணிப்பாளர் மருத்துவர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, பாடசாலை மாணவர்களிடையே தொழுநோய் பரவுவது அதிகரித்துள்ளதாக தேசிய தொழுநோய் பிரசாரம் கூறியுள்ளது.
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்
இந்த வருடம் பதிவாகியுள்ள தொழுநோயாளிகளில் 15% பாடசாலை மாணவர்கள் எனவும் அதன் பணிப்பாளர் மருத்துவர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தின் முதல் 7 மாதங்களில் இந்நாட்டில் இருந்து 450 தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
அநுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் மேல் மாகாணத்திலும் இந்நோய் பரவும் அபாயம் அதிகம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.