வீதியில் நடமாடியவர்களுக்கு ரெபிட் அன்டிஜன் பரிசோதனை! 40 பேருக்கு தொற்று உறுதி - செய்திகளின் தொகுப்பு
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி, பதுளை மாநகரில் சுற்றித் திரிந்த 40 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றுக்கு உள்ளான அனைவரும் இன்று உரிய சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பதுளை மாநகர பிரதம பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பியல்பத்ம தெரிவித்துள்ளார்.
பதுளைப் பொலிஸார், இராணுவத்தினர், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் ஆகியோர் இணைந்து பதுளை மாநகரில் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போதே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பதுளை மாநகரில் எக்காரணமுமின்றி வெறுமனே சுற்றித்திரிந்த 250 பேர் “ரெபிட் அன்டிஜன்” பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை இணைத்து வருகிறது இன்றைய செய்திகளின் தொகுப்பு,