நாமல் தெரிவித்த விடயம்! மகிழ்ச்சியில் ஹக்கீம்
அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்த விடயம் குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி பல குற்றச்செயல்கள் இடம்பெறுகின்றன. ஹிஜாஸ் ஹிஸ்புல்லா என்பவர் நீண்டகாலமாக தடுப்பில் உள்ளார்.
சாட்சியங்களும் ஆதாரங்களும் திரட்டப்பட்டுள்ள நிலையில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை துஷ்பிரயோகம் செய்கின்றமை பற்றி ஐ.நா மனித உரிமைப் பேரவைகள் ஆணையாளர் நேற்றைய தினம் உரையாற்றியபோது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
அதேபோல ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையும் இழக்கக்கூடிய அபாயமும் வந்துள்ளது. சிறைச்சாலைக்குள் நீதிமன்றம் செல்கின்ற விடயங்கள் இருக்கின்றதோடு குற்றப் புலனாய்வுப்பிரிவு, பயங்கரவாத விசாரணைப் பிரிவுகளில் உள்ளவர்கள் பற்றி அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும்.
ஸ்ரீலங்கா அரசாங்கம் செய்துள்ள செயற்பாட்டினால் இன்று கன்னத்தில் அறை விழுந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.