சஜித் தரப்புடன் அரசியல் கூட்டணி கிடையாது! ஐக்கிய தேசியக் கட்சி அறிவிப்பு
ஐக்கிய மக்கள் சக்தியுடன் அரசியல் கூட்டணி வைத்துக் கொள்ளப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசியக் கட்சி ஆதரிக்கும் என்ற தகவல்களில் உண்மையில்லை என கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
வேட்பாளர் ஒருவரை களமிறக்கும்
எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனது வேட்பாளர் ஒருவரை களமிறக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த எவரேனும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொள்ள விரும்பினால் இணைய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் எந்தவொரு உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொள்ளப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் எந்தவொரு பதவியையும் ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளமாட்டார் எனவும், தேர்தல் வெற்றியின் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் ஜனாதிபதியினால் வழங்கப்படும் பதவிகளை ஏற்றுக்கொள்வார்கள் எனவும் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 12 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
