ரணிலின் வழக்கு விவகாரம் : நீதிமன்ற வளாகத்திற்கான தடைவிதிப்பு தொடர்பில் விசாரணை
கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் கடந்த மாதம் (26) ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கின் போது நீதிமன்ற வளாகத்திற்குள் செல்ல பௌத்த தேரர்களுக்கு தடைவித்தமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணைகள் நடைபெற்றுள்ளது.
இன்று(15) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவான இரு தேரர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வருகை தந்திருந்த நிலையில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரம்
தொடர்ந்து பேசிய அவர்கள், மாலபே சீலரத்தின தேரர் தான் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.அன்று கோட்டை நீதிவான் நீதிமன்ற வளாகத்திற்குள் செல்வதற்கு நாம் கௌரவமான கோரிக்கை விடுத்தோம்.
ஆனால் பொலிஸார் சந்தர்ப்பம் வழங்கவில்லை. அப்போது யார் உங்களுக்கு ஆணை வழங்கியது என்று நாங்கள் கேட்டோம். கோட்டை நீதிவான் நீதிமன்ற நீதிபதியா?இல்லை மேல் இடத்தின் ஆணை என்று கூறினர்.
அதன் பின்னர் நாங்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தோம். அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரம் அவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது.
இந்நிலையில், அது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ளவே எங்களை இன்று அழைத்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 1 மணி நேரம் முன்

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
