ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிகச் சிறந்த தலைவர்! அலி சப்ரி புகழாரம்
"ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நாடு பல்வேறு துறைகளில் மறுமலர்ச்சி அடைந்தே தீரும்" என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் மேலும் கூறுகையில்,
மிகச் சிறந்த தலைவர் ரணில்
"இப்போதிருக்கின்ற தலைவர்களுள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிகச் சிறந்த தலைவர்.
அவரது வேலைத்திட்டங்களைப் பூர்த்தி செய்வதற்குச் சில காலம் வழங்கப்பட வேண்டும். நான் இருக்கின்ற முகாமை விட்டுப் போகின்றவன் அல்லன்.
எமது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே ரணிலை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தது. நான் இதற்கு முன் அவருக்கு எதிராகவே வேலை செய்தேன். இப்போதுதான் அவருடன் இணைந்து செயலாற்றும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.
அவர் பற்றி நாம் தவறாகப் புரிந்து வைத்திருந்தோம் என்பது அவருடன் இப்போது இணைந்து செயலாற்றும் போது புரிகின்றது.
பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு, வெளிவிவகார கொள்கை போன்றவற்றில் ஜனாதிபதி
ரணிலுக்கு விரிவான அறிவு உண்டு." என்றார்.

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு ஆளே மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam

இந்தியாவின் எதிரி நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தல் - கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri

பிரித்தானியாவை நேரடியாக எச்சரிக்கும் அமெரிக்கா - லண்டனில் சூப்பர் தூதரகத்தை கட்டும் சீனா News Lankasri
