'மூளை வடிகால்' பிரச்சினைக்கு நட்டஈடு வழங்குமாறு ஜி77 மாநாட்டில் ரணில் கோரிக்கை
பொதுவாக 'மூளை வடிகால்' என்று அழைக்கப்படும் தெற்கின் வறிய நாடுகளில் இருந்து திறமையான நிபுணர்களை ஆட்சேர்ப்பு செய்ததற்காக நட்டஈடுகளை வழங்குமாறு, உலகளாவிய வடக்கின் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த கோரிக்கையானது கடந்த வெள்ளிக்கிழமை (15.09.2023) ஜி77 உச்சிமாநாட்டில் ஜனாதிபதியால் விடுக்கப்பட்டுள்ளது.
ஹவானாவில் 134 நாடுகளின் ஜி77 மற்றும் சீன உச்சிமாநாட்டில் பேசிய ஜனாதிபதி விக்ரமசிங்க, 'மூளை வடிகால்' பிரச்சினையைக் குறிப்பிட்டுள்ளார்.

அச்சுறுத்தல்
அத்துடன் இது 'படித்த மனிதவளத்தை' இழக்கச் செய்வதாகவும், உலகளாவிய தெற்கு நாடுகளை அச்சுறுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவின் வெற்றிகளை அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். அந்த நாடுகள் மனிதவளத்தை வளர்ப்பதன் மூலமே வளர்ச்சியைக் கண்டன என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan