மிகுந்த அழுத்தத்தில் மக்கள்! வீட்டிற்கு செல்லலாம் - ஊதியம் வழங்க முடியாதென ஜனாதிபதி அறிவிப்பு
இன்று நாட்டு மக்கள் மிகுந்த அழுத்தத்தில் உள்ளனர், வரலாற்றில் இத்தகைய அழுத்தம் இருந்ததில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அந்த நிலையிலிருந்து நாம் வெளியேற வேண்டும். கடந்த ஆண்டை விட பொருளாதார வளர்ச்சி குறைவடையும். இது வேகமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் விளைவை அனைவரும் அனுபவிக்க வேண்டும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
அத்துடன் பாடுபட்டு வேலை செய்ய முடியாத அரச உத்தியோகத்தர்கள் வீட்டிற்கு செல்லலாம். எந்த வேலைகளையும் செய்யாதிருப்பதவர்களுக்கு ஊதியத்தை வழங்கிக் கொண்டிருக்க முடியாது என அவர் கடுமையாக அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,