ஐக்கிய நாடுகள் குறித்து அநுர அரசாங்கத்தை எச்சரித்த ரணில்
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் உக்ரைனையும் இலங்கையையும் வித்தியாசமாக நடத்துவதன் மூலம் இரட்டை நிலைப்பாட்டை பின்பற்றுகிறது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
எனவே, தற்போதைய அரசாங்கமும் மற்ற அரசியல் கட்சிகளும் இந்த விடயத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு செப்டம்பரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகம், இலங்கை தொடர்பில் ஒரு தீர்மானத்தை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இலங்கை அரசாங்கமும் பிற பங்குதாரர்களும் இந்த விடயத்தை இப்போதே தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும், என்று விக்கிரமசிங்க தனது அலுவலகத்தில், தம்மை சந்தித்த இளைஞர்கள் குழுவிடம் கூறியுள்ளார்.
உக்ரைன் தேர்தல்
உலகளாவிய அரசியலில், ரஷ்யாவுடனான உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா முயற்சிப்பதில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யர்கள் தங்கள் நோக்கங்களை வென்றெடுக்க தியாகங்களைச் செய்துள்ளனர். நெப்போலியனை தோற்கடிக்க அவர்கள் தங்கள் மூலதனத்தை எரித்தனர்.
பல ஐரோப்பிய நாடுகள் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, ஜனாதிபதித் தேர்தலை நடத்தாதது குறித்து மௌனம் காத்து வருகின்றன. இராணுவச் சட்டம் நடைமுறையில் இருக்கும்போது பொதுத் தேர்தலை ஒத்திவைக்க அந்த நாட்டின் அரசியலமைப்பு ஏற்பாடு செய்கிறது.
இருப்பினும், ஜனாதிபதித் தேர்தல் பற்றி அரசியலமைப்பில் எதுவும் கூறப்படவில்லை. முதலாம் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போரின் போது இங்கிலாந்து தனது தேர்தலை ஒத்திவைத்தது.
இரட்டை கொள்கை
இது ஹவுஸ் ஒஃப் கொமன்ஸ் மற்றும் ஹவுஸ் ஒ ஃப் லோர்ட்ஸ் ஆதரவுடன் செய்யப்பட்டது. அத்துடன் இங்கிலாந்தில் எழுதப்பட்ட சட்டம் இல்லை என்றும் ரணில் நினைவு கூர்ந்தார்.
இலங்கையில் வடக்கில் விடுதலைப் புலிகள் மற்றும் தெற்கில் ஜேவிபி சண்டையிட்ட நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்பட்டன. இலங்கை சரியான நேரத்தில் தேர்தல்களை நடத்தியது. 2024 இலும் தேர்தல்கள் நடத்தப்பட்டன. தற்போது ஜேவிபி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியில் உள்ளது.
ஜேவிபி தேர்தலில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், அவர்களை, தேர்தல் மூலம் ஒரு ஜனநாயக அமைப்புக்குள் கொண்டு வர முடிந்தது. இருப்பினும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் இரட்டை கொள்கைகளை பின்பற்றுகிறது, அது, இலங்கையை வித்தியாசமாக நடத்துகிறது என்றும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

5 நாள் முடிவில் வெற்றிப்பெற்றுள்ள டிராகன் திரைப்படம் செய்த வசூல்... தமிழகத்தில் மட்டுமே இவ்வளவா? Cineulagam

எலான் மஸ்க்கின் கனேடிய குடியுரிமைக்கு ஆபத்து? 2.5 லட்சம் கனேடியர்கள் மனுவில் கையெழுத்து News Lankasri

ட்ரம்ப் முன்வைத்த ஒப்பந்தத்துக்கு சம்மதித்தார் உக்ரைன் ஜனாதிபதி: விரைவில் கையெழுத்தாகலாம் News Lankasri
