மகிந்தவுக்கு நன்றி கூறிய ரணில்
நாட்டை கட்டியெழுப்ப முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எடுத்த சரியான தீர்மானத்திற்கு நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் இடம்பெற்ற கூட்டத்தின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டைக் கட்டியெழுப்ப ஆதரவளிக்குமாறு தான் முதலில் கோரியதாகவும், அன்றைய தினம் அவர் எடுத்த சரியான தீர்மானத்திற்கே நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார வீழ்ச்சி
2022ஆம் ஆண்டு நாடு பாரிய அரசியல் மற்றும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த போது, நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை தாம் மட்டும் ஏற்கவில்லை என அவர் கூறியுள்ளார்.
நாட்டை நேசிக்கும் திறமையான குழுவினரே தன்னுடன் இணைந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அவர்கள் தமது பொறுப்பை சரியாக நிறைவேற்றியதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அந்த குழுவினால் மட்டுமே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என நாட்டு மக்கள் தற்போது நம்புவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
