சாமர சம்பத் தொடர்பில் ரணில் சிறப்பு அறிவிப்பு!

Ranil Wickremesinghe Sri Lanka Police Investigation MP Chamara Sampath Dassanayake
By Dharu Apr 10, 2025 09:41 AM GMT
Report

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சாமர சம்பத்தின் கைது தொடர்பில் கேள்வி எழுவதாகவும், நாடாளுமன்றத்திடமிருந்தும் ஒரு விசாரணையைக் அவர் கோர வேண்டும் எனவும் ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யாழ். பலாலி வீதி திறப்பு விவகாரம்! வர்த்தமானி தொடர்பில் சுமந்திரன் கேள்வி

யாழ். பலாலி வீதி திறப்பு விவகாரம்! வர்த்தமானி தொடர்பில் சுமந்திரன் கேள்வி

சாமர சம்பத்

“நான் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்தின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்தேன்.

சாமர சம்பத் தொடர்பில் ரணில் சிறப்பு அறிவிப்பு! | Ranil S Special Statement Regarding Chamarasampath

தான் பிரதமராக இருந்த காலத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எனது ஒப்புதலுடன், அன்று ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டார்.

அந்த சுற்றறிக்கையில் மாகாண சபை நிதியை வைப்பு கணக்குகளில் வைப்பு செய்ய முடியாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மற்ற பணத்தைப் போலவே அரசாங்கப் பணமும் அந்த வருடத்திற்குள் செலவிடப்பட வேண்டும் என கூறப்பட்டது.

இல்லையெனில், நிதி அமைச்சுக்கு அல்லது மாகாண சபையின் நிதி அமைச்சுக்கு அந்தப் பணத்தைத் திருப்பித் தர வேண்டியிருக்கும்.

அந்தப் பணத்தைச் சேமித்து, வைப்புத் தொகைக் கணக்குகளில் வைத்து, பின்னர் அதை வேறு திட்டங்களுக்குப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்பதால் நாங்கள் அந்த நடவடிக்கையை எடுத்தோம்.

ஜனாதிபதி தலைமையில் சர்வ கட்சித் தலைவர்கள் சந்திப்பு ஆரம்பம்

ஜனாதிபதி தலைமையில் சர்வ கட்சித் தலைவர்கள் சந்திப்பு ஆரம்பம்

சமந்த வித்ய ரத்ன

அந்த நேரத்தில், முதலமைச்சராக இருந்த சாமர சம்பத் மற்றும் பல முதலமைச்சர்கள் என்னிடம் பேசினர்.

சாமர சம்பத் தொடர்பில் ரணில் சிறப்பு அறிவிப்பு! | Ranil S Special Statement Regarding Chamarasampath

இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அதன்படி, அவர்கள் அந்த பணத்தை வைப்பு கணக்குகளில் இருந்து எடுத்துள்ளனர்.

இந்த நடவடிக்கைகள் ஊவா மாகாணத்தில் மட்டுமல்ல, பிற மாகாணங்களிலும் மேற்கொள்ளப்பட்டன. மேலும், சாமர சம்பத் அவ்வப்போது என்னை தொலைபேசியில் தொடர்புகொள்வார்.

நான் கல்வி வேலை போன்றவற்றில் அவருக்கு உதவி செய்தேன். ஆனால் அந்த நேரத்தில் நாங்கள் எதிர் பக்கங்களில் இருந்தோம்.

சாமர சம்பத் முதலமைச்சராக இருந்தபோது தற்போதைய அமைச்சர் சமந்தா வித்யா ரத்ன ஒரு முறைபாட்டை என்னிடம் வழங்கினார்.

இது என்னுடைய வேலை இல்லை என்றும், இது குறித்து இலஞ்ச ஒழிப்பு ஆணையத்துடன் விவாதிக்க வேண்டும் என்றும் அவரிடம் சொன்னேன்.

முதலமைச்சர்களின் பணிகளில், அவர்களுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ நான் ஈடுபட முடியாது என்றும் கூறினேன்.

மகிந்தவின் மனைவி மீது சி.ஐ.டியில் முறைப்பாடு

மகிந்தவின் மனைவி மீது சி.ஐ.டியில் முறைப்பாடு

குற்றவாளி அல்ல

இந்த விவகாரம் குறித்து ஆணையம் விசாரணை நடத்தியது. எந்த விசாரணையிலும் அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்படவில்லை.

சாமர சம்பத் தொடர்பில் ரணில் சிறப்பு அறிவிப்பு! | Ranil S Special Statement Regarding Chamarasampath

அவர் ஒரு சந்தேக நபராகக் கூட அறிவிக்கப்படவில்லை. அந்த விடயங்கள் குறித்தே  தற்போது விசாரணைகள் நடத்தப்படுகின்றன.

புதிய குற்றச்சாட்டுகள் அல்லது புதிய சம்பவங்கள் குறித்து அல்ல.

வேறு பிரச்சினை என்னவென்றால், சாமர சம்பத் வாக்குமூலம் அளித்தவுடன் கைது செய்யப்பட்டதாக அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் நாடாளுமன்றத்தில் அடிக்கடி பேசுகிறார். அவர் எதிர்க்கட்சியின் வலுவான குரலாக இருக்கிறார்.

இந்த விடயத்தில் அவர் நாடாளுமன்றத்திடமிருந்தும் ஒரு விசாரணையைக் கோர வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

இது நாடாளுமன்ற சிறப்புரிமை மீறலா என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும்” என ரணில் குறிப்பிட்டுள்ளார்.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US