ரணில் வகுக்கும் திட்டம்! மத்திய வங்கியின் ஆளுநராக தமிழர் ஒருவருக்கு வாய்ப்பு - செய்திகளின் தொகுப்பு
நிதியமைச்சராக இன்று ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ள நிலையில் மத்திய வங்கி ஆளுநரில் மாற்றம் ஏற்படலாம் என தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, தற்போதைய மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுக்கு பதிலாக இந்திரஜித் குமாரசுவாமி நியமிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்திரஜித் குமாரசுவாமி இலங்கைத் தமிழர் அவர், இவர் கொழும்பு றோயல் கல்லூரி, இங்கிலாந்து ஹரோ பள்ளி ஆகியவற்றில் கல்வி கற்று பின்னர் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டம் பெற்றார். பின்னர் இங்கிலாந்து சசெக்சு பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலைநேர செய்திகளின் தொகுப்பு,