குதிரை சின்னத்தில் களமிறங்கும் ரணில்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய வேட்பாளராகக் களமிறங்கவுள்ள ரணில் விக்ரமசிங்க, பொதுச் சின்னமாக குதிரை சின்னத்தைத் தேர்ந்தெடுக்கக் கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுக் கூட்டணியின் பெயர், சின்னம் என்பன பற்றிய இறுதிக் கட்ட கலந்துரையாடல் தற்போது இடம்பெற்று வருகின்றது.
ஜனாதிபதியிடம் கோரிக்கை
யானை, அன்னம் மற்றும் மொட்டு என்பன பொதுச் சின்னமாக இருக்கக் கூடாது எனப் பெரும்பாலானவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இதனால் பொதுச் சின்னமாக குதிரை சின்னத்தை தேர்ந்தெடுப்பது பற்றி ஜனாதிபதி ரணில் ஆராய்ந்து வருவதுடன் கப்பல் சின்னத்தை ஏற்குமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், பொருளாதார போரில் வெல்வதற்குக் குதிரை போல் வேகமாகப் பயணிக்ககூடிய ஒருவரே தேவை என்ற பிரசாரம் குதிரை சின்னம் மூலம் முன்னெடுக்கப்படவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 13 நிமிடங்கள் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
