மறைந்த அட்டமஸ்தானாதிபதியின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி (Photos)
மறைந்த அநுராதபுர அட்டமஸ்தானாதிபதி வடமத்திய மாகாண பிரதான சங்கநாயக்க தேரர் கலாநிதி வண.பல்லேகம சிறினிவாசவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
மறைந்த அட்டமஸ்தானாதிபதியின் பூதவுடலுக்கு இன்று (22.10.2022) இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி, அங்கே வைக்கப்பட்டிருந்த குறிப்பேட்டிலும் தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.
இறுதி அஞ்சலி
இச்சந்தர்ப்பத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜக்கிய தேசியக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, பொதுச் செயலாளர் பாளித்த ரங்கே பண்டார உள்ளிட்ட பலரும் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டதுடன் மறைந்த அட்டமஸ்தானாதிபதியின் தேகத்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.



Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்த தக் லைஃப்.. இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam

விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri
