ஜனாதிபதி ரணில் - பிரதமர் மோடி டெல்லியில் சந்திப்பு
நீண்ட முயற்சியின் பின்னர் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பு எதிர்வரும் 21ஆம் திகதி இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது.
சரியாக ரணில் ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒரு வருட நிறைவிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடும் முயற்சிகளுக்கு பின்னர் சந்திப்பு
இலங்கை ஜனாதிபதி ஒருவர் புதிதாகப் பதவியேற்றால் அவர் மேற்கொள்ளும் முதல் உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணம் இந்தியாவுக்கு என்பதே சம்பிரதாயமாக இருந்து வருகின்றது.
ஆனால், ரணில் ஜனாதிபதியாகி ஒரு வருடமாகியும் அது நடக்கவில்லை.
ஒரு வருடமாக அவர் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தார் ரணில். அந்த முயற்சி இப்போதுதான் சாத்தியமாகியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
முத்து தலையில் இடியை இறக்கிய சிந்தாமணி.. அதிர்ச்சியில் அண்ணாமலை குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான் Cineulagam
3 மற்றும் 5 வயது குழந்தையை காட்டில் கைவிட்ட பிரான்ஸ் பெற்றோர்: போர்ச்சுகல் பொலிஸார் அதிரடி News Lankasri