சமையல் எரிவாயுக்கான டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளது: பிரதமர் ரணில் தெரிவிப்பு
சுகாதாரம், உணவு மற்றும் உரம் ஆகிய துறைகளில் மேலதிக உதவிகளை வழங்குவதற்கு உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உறுதியளித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் பிரதிநிதிகளுடன் மருந்துகள், உணவு மற்றும் உரம் வழங்குவதற்கான ஆதரவு குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளார்.
இதேவேளை, அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பில் நாளை கலந்துரையாடப்படும் எனவும், பின்னர் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தமது ட்விட்டர் பதிவொன்றிலோ பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
There is a lot to be done and undone. We are prioritizing matters, rest assured they shall be addressed as early as possible. We have managed to get things moving in the last 48 hours. I will provide a full explanation of the financial crisis faced by the country tomorrow (16)
— Ranil Wickremesinghe (@RW_UNP) May 15, 2022
செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. நாங்கள் விடயங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம், முடிந்தவரை விரைவில் அவை தீர்க்கப்படும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.நாடு எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடி தொடர்பில் நாளை (16) முழு விளக்கத்தையும் வழங்கவுள்ளேன்.
3/ Medicine, Food and Fertilizer: At the conclusion of our meeting today, The World Bank and ADB have pledged support to assist in procuring essentials items.
— Ranil Wickremesinghe (@RW_UNP) May 15, 2022
வங்கிகளில் டொலர் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, எதிர்வரும் வாரத்திற்கான எரிபொருள் தேவைகளுக்குத் தேவையான நிதியைப் பெறுவதற்கான பிற வழிகள் தொடர்பில் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்.
எரிவாயு சரக்குக்கான கட்டணங்களை அரசாங்கம் உறுதி செய்துள்ளது, முடிந்தவரை விரைவாக மக்களுக்கு விநியோகிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மருந்து, உணவு மற்றும் உரம் பற்றி இன்றைய கூட்டத்தின் முடிவில், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவை அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு உதவுவதாக உறுதியளித்துள்ளன. எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்