சாதித்துக் காட்டியுள்ளார் ரணில்: எதிர்க்கட்சி ரணிலுக்கு புகழாரம்
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெற்று சாதித்துக் காட்டியுள்ளார், எனவே தற்போது நாம் அனைவரும் முடிந்தளவு ஆதரவை வழங்கி இந்த நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் இவ்வாறு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியைப் பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி மேற்கொண்டுள்ள உடன்படிக்கை தொடர்பில் இன்று (22.03.2023) நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

எதிர்க்கட்சி அரசுக்கு ஆதரவு
சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியைப் பெற்றுக் கொள்வதற்காக எதிர்க்கட்சி என்ற வகையில் நாம் ஆதரவு வழங்க வேண்டும்.
இந்த உதவி கிடைப்பதையிட்டு மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் அரசுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெற முடியாது என்று பலராலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இருப்பினும், ஜனாதிபதி இந்த ஆதரவைப் பெற்று சாதித்துக் காட்டியுள்ளார்.
எனவே, தற்போது நாம் அனைவரும் முடிந்தளவு ஆதரவை வழங்கி இந்த நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 7 மணி நேரம் முன்
ஒரே ட்யூனில் உருவான 2 பாடல்கள்.. இரண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட்! மேஜிக் செய்த இசையமைப்பாளர் இளையராஜா.. Cineulagam
போராட்டத்திற்கு பிறகு தமிழுக்கு பிறந்த குழந்தை, ஆனால் எதிர்ப்பாரா திருப்பங்களுடன்... சின்ன மருமகள் சீரியல் புரொமோ Cineulagam
'சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது'.. நடிகை சைத்ரா அச்சரின் கிளாமர் புகைப்படங்கள் Cineulagam