சாதித்துக் காட்டியுள்ளார் ரணில்: எதிர்க்கட்சி ரணிலுக்கு புகழாரம்
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெற்று சாதித்துக் காட்டியுள்ளார், எனவே தற்போது நாம் அனைவரும் முடிந்தளவு ஆதரவை வழங்கி இந்த நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் இவ்வாறு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியைப் பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி மேற்கொண்டுள்ள உடன்படிக்கை தொடர்பில் இன்று (22.03.2023) நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

எதிர்க்கட்சி அரசுக்கு ஆதரவு
சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியைப் பெற்றுக் கொள்வதற்காக எதிர்க்கட்சி என்ற வகையில் நாம் ஆதரவு வழங்க வேண்டும்.
இந்த உதவி கிடைப்பதையிட்டு மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் அரசுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெற முடியாது என்று பலராலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இருப்பினும், ஜனாதிபதி இந்த ஆதரவைப் பெற்று சாதித்துக் காட்டியுள்ளார்.
எனவே, தற்போது நாம் அனைவரும் முடிந்தளவு ஆதரவை வழங்கி இந்த நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 12 மணி நேரம் முன்
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan