தீவகத்தை இலக்கு வைக்கும் ரணிலின் இரகசியங்கள் அம்பலம்(Video)
தீவகத்திலிருக்கும் அனைத்து நிர்வாக பணிகளையும் கொழும்பால் நேரடியாக ஆட்சி அதிகாரம் செய்வதற்குரிய திட்டம் நடைமுறைப்படுள்ளதாக தமிழத்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 13ஆம் திருத்தத்தின் மூலம் மக்களுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாக காட்டிக்கொண்டு சிங்கள மயமாக்கலை முன்னெடுத்து செல்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
யாழ். கொக்குவிலில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று(02.08.2023) மதியம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தைக்குச் செல்லும் தரப்பினருக்கு இந்த செயற்பாடு நன்றாகவே தெரியும்.
கொழும்பால் நேரடி ஆட்சி
13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக காட்டி தமிழ் மக்களை ஏமாற்றும் ரணில் விக்ரமசிங்கவின் மோசமான முகத்தை காட்டும் பல விடங்கள் இன்னும் அம்பலமாகவுள்ளன.
இதேவேளை கடந்த ஒரு வருடமாக தீவகம் முழுதும் அரசாங்கம் ஒரு அதிகார சபைக்குள் கொண்டு வந்து தீவகத்திலிருக்கும் அனைத்து நிர்வாக பணிகளையும் கொழும்பால் நேரடியாக ஆட்சி அதிகாரம் செய்வதற்குரிய வகையிலான திட்டம் நடைமுறைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
அண்மையில் ரணில் யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்ட போதே குறித்த விடயம் தொடர்பில் ஒரு சில புத்தி ஜீவிகளைக்கொண்டு இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த உத்தேச சட்டம் மகாவலியை விடவும் மிக மோசமான முறையில் அமைந்திருக்கும். முற்று முழுதாக தமிழ் மக்களுக்கு பாதகமான முறையில் அமைவதோடு, அனைத்து செயற்பாடுகளும் கொழும்பில் இருந்தே கட்டுப்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
ரணிலுக்கு வெள்ளையடிக்கும் எம்.பிக்கள்
இந்த திட்டம் தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவிற்கு சார்பாக செயற்படும் தமிழத் தரப்புக்களுக்கும் நன்றாகவே தெரியும். அதுமட்டுமன்றி தமிழ்த்தேசியம் பேசும், தமிழரசு கட்சி, ரெலோ, புளொட் மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி என்பவற்றுக்கும் நன்றாகவே தெரிந்தும் அனைத்தையும் மூடி மறைத்து தமிழர்கள் மத்தியில் ரணிலுக்கு வெள்ளையடிக்கும் மிக மோசமான செயற்பாட்டிற்கும் தீவகத்தை முற்று முழுதாக இழக்க வேண்டிய ஒரு நிலைக்கும் இவர்கள் துணை போகின்றனர்.
இதேவேளை வடக்கு கிழக்கு கடற் பகுதிகளையும் சிங்கள இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, கடற்றொழில் செய்யவிடாது தடுத்ததோடு, தொழிலாளர்களை வெளிநாட்டிற்கு செல்ல வைக்கும் ஒரு நிலையையும் ஏற்படுத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam
