ரணிலுக்கு சட்டத்தில் தப்பிக்க வாய்ப்பு வழங்குமா ஜே.வி.பி..! பட்டலந்தவில் திண்டாடும் அரசு

Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe Tilvin silva Batalanda commission Report
By Shrikanth Jan 28, 2026 08:57 AM GMT
Report

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த அறிக்கையில் காணப்படும் சட்டத்திட்டங்களை நடைமுறைப்படுத்தினால் அரசாங்கம் பாரிய சிக்கல்களுக்கு முகம் கொடுக்க நேரிடலாம்  என்று தெரிவிக்கப்படுகின்றது. 

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்வதற்கு சட்ட மா அதிபரினால் நான்கு பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

யோசித ராஜபக்சவின் பாதையில் சென்ற நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம்...

யோசித ராஜபக்சவின் பாதையில் சென்ற நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம்...

சட்ட மா அதிபருக்கு அனுப்பப்பட்ட அறிக்கை

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை, கடந்த வருடம் 2025 மார்ச் மாதம் 14 ஆம் திகதி சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த அறிக்கை மீதான இரண்டு நாள் விவாதம் இடம்பெற்றது.

இந்நிலையிலேயே, பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த செயற்பாடுகளின் பின்னரே அரசாங்கத்திற்கு பாரிய சிக்கல் ஏற்பட்டது.

ரணிலுக்கு சட்டத்தில் தப்பிக்க வாய்ப்பு வழங்குமா ஜே.வி.பி..! பட்டலந்தவில் திண்டாடும் அரசு | Ranil Anura Kumara Tilvin Silva  

குறித்த அறிக்கையில் ஜே.வி.பியால் 88-89 ஆம் ஆண்டுகளில் அரசுக்கு எதிராக மேற்கொண்ட கிளர்ச்சி மற்றும் அவர்களால் கொல்லப்பட்டவர்கள் தொடர்பில் எவ்வித மன்னிப்பும் வழங்க முடியாது.

என்று குறிப்பிடுவதோடு ஜே.வி.பியால் 1987 முதல் 1990 முதல் அரச அதிகாரத்தை கைப்பற்றி மேற்கொண்ட பயங்கரவாத நடவடிக்கைகளால் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பை வாய், கண் மூடி பார்த்து கொண்டிருக்க முடியாது.

ஆனால் அரசாங்கம் நீதித்துறைக்கு அப்பால் அதற்கெதிராக செயற்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம் என்று அந்த அறிக்கையில் இரு பக்கங்களின் அராஜக செயற்பாடுகளை கண்டித்துள்ளதோடு அன்றை அரசாங்கம் இதை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கையை ஓரளவு நியாயப்படுத்தியுள்ளது.

என்பிபி அரசுக்கு ஏற்படப்போகும் ஆபத்து

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளது. நாடாளுமன்றத்திற்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால், அரசியலமைப்பு சட்டத்தின் படி இது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கு பின்னர் என்ன செய்ய வேண்டியுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ரணில் விக்ரமசிங்க கொலையாளி என நிரூபிக்கப்பட வேண்டும் ஆனால், ஜே.வி.பி செய்த அரசுக்கு எதிரான அனைத்து செயற்பாடுகளும் ஏற்கொள்ளப்பட்டால் என்ன நடக்கும்.

ரணிலுக்கு சட்டத்தில் தப்பிக்க வாய்ப்பு வழங்குமா ஜே.வி.பி..! பட்டலந்தவில் திண்டாடும் அரசு | Ranil Anura Kumara Tilvin Silva

அரசியலமைப்புச் சட்டத்தில் பொது விதிகளின் 157 ஆவது 1-2-3 இன் கீழ் ஒரு கட்சி அல்லது தனிநபர்,ஒரு குழு அரசுக்கு எதிராக மேற்கொண்ட  பயங்கரவாத செயற்பாடுகளுக்கு தண்டனையாக கட்சி தடைச் செய்யப்பட்டு அதன் சொத்துக்கள் அரசுடமையாக்கப்படலாம்.

மேலும் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி பதவிகள் கூட பறிக்கப்படலாம். ஒருபக்கம் ரணில் தண்டிக்கப்படுவதோடு ஜே.வி.பி சார்பான அரசுக்கு எதுவும் நடக்கலாம்.

இந்த காரணங்கள் மிகவும் பாரதூரமானதாகும். அடுத்து அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என தெரியாத தன்மையே காணப்படுகிறது.

உலக சுகாதார நிறுவனம் இலங்கைக்கு விடுக்கும் மகிழ்ச்சியான செய்தி

உலக சுகாதார நிறுவனம் இலங்கைக்கு விடுக்கும் மகிழ்ச்சியான செய்தி

   

மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US