ஒன்றும் இல்லாத 13 ஆம் திருத்தத்தை பேசிய இரு நாட்டு தலைவர்கள்: சரவணபவன் விசனம்

13th amendment Jaffna Ranil Wickremesinghe Narendra Modi
By Kajinthan Jul 22, 2023 11:34 PM GMT
Report

ஒன்றும் இல்லாத 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பிலேயே இரு நாட்டு தலைவர்களும் பேசியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார்.

யாழ். அராலி மத்தியில் நேற்று (22.07.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

உப்பு சப்பு இல்லாத 13 ஆவது திருத்த சட்டம் தொடர்பிலேயே இரு நாட்டு தலைவர்களும் பேசியுள்ளார்கள். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13 மைனஸ் குறித்து பேசியிருக்கிறார்.

மகிந்த 13 பிளஸ் பிளஸ் என்று கருத்து கூறி இந்திய பிரதமர் இலங்கையை விட்டு செல்லமுன்பே அவ்வாறு கூறவில்லை என தெரிவித்துள்ளார்.

ஒன்றும் இல்லாத 13 ஆம் திருத்தத்தை பேசிய இரு நாட்டு தலைவர்கள்: சரவணபவன் விசனம் | Ranil And Modi Spoke 13Th Amendment Saravanabavan

தமிழருக்குள் பிளவு

அதே போல தமிழர்கள் கோரிக்கை நியாயம் என குறிப்பிட்ட ரணில் விக்ரமசிங்க இன்று பொலிஸ் அதிகாரத்தை விடுத்து பேசுகின்றார்.

இருக்கின்ற கட்சிகளையும் உடைத்து இன்னும் தமிழருக்குள் பிளவினை ஏற்படுத்துவதே ஜனாதிபதியின் நோக்கம்.

கட்சிகளை பிரிப்பதில் கைதேர்ந்தவர் ரணில் விக்ரமசிங்க விடுதலைப்புலிகளை உடைத்து கருணாவை வெளியே எடுத்தவரும் அவரே தனது வாயாலே அதனை ஒத்துக்கொண்டார்.

ஒன்றும் இல்லாத 13 ஆம் திருத்தத்தை பேசிய இரு நாட்டு தலைவர்கள்: சரவணபவன் விசனம் | Ranil And Modi Spoke 13Th Amendment Saravanabavan

வழமையான அரசியல்வாதிளை விட புத்திசாலி.தமிழ் கட்சிகளை சந்திக்கும்பொழுது கடிதம் வாங்குகின்றார் ஆனால் அதனை வாசிப்பாரா என்பது கேள்விக்குறி.

பல தமிழ்கட்சிகள் இன்று வெளிப்படையாக உண்மையை பேச மறுக்கின்றார்கள். தெட்ட தெளிவாக எமக்கு தெரியும் இவர்கள் எமக்கு ஒன்றையும் வழங்போவது கிடையாது. 13 ஆவது திருத்தத்தையே இல்லாதொழிக்க பாடுபடுகின்றார்கள் என தெரிவித்துள்ளார்.

கறுப்பு ஜூலை

கறுப்பு ஜூலை இனக்கலவரம் அரங்கேறி 40 ஆண்டுகளாகின்ற நிலையில் அதனால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை.

நீதிக்காக தமிழ் மக்கள் இன்னும் எவ்வளவு ஆண்டுகள் காத்திருக்கவேண்டும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தற்போதைய ஜனாதிபதி ரணிலின் மாமனார் ஜே.ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் காலத்தில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட இனக்கலவரம் அரங்கேற்றப்பட்ட நாள் இன்று.

இந்த இனப்படுகொலையில் கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களின் எண்ணிக்கையோ, தென்னிலங்கையில் துவசம் செய்யப்பட்ட தமிழர்களின் சொத்துக்களின் விவரங்களோ உத்தியோகபூர்வமாகக் கணக்கெடுக்கப்படவில்லை.

இந்த நாட்டில் தமிழர்களுக்கு இலங்கை அரசாங்கம் பாதுகாப்பளிக்காது என்கின்ற உண்மை உலக நாடுகளுக்கு மீண்டும் முரசறையப்பட்ட நாள்.

தனது நாட்டு மக்களைப் பாதுகாக்கவேண்டிய அரசாங்கமே அவர்களை அழிப்பதற்கு துணைபோன வரலாறு அரங்கேறிய நாள். இந்தியா உட்பட சர்வதேச சமூகம் அன்று உரிய வகையில் நீதியை நிலைநாட்டியிருந்தால் 2009ஆம் ஆண்டில் மற்றோர் கோரமான இனப்படுகொலையை தமிழினம் சந்திருக்காது.

ஒவ்வொரு நாடுகளும் தங்களது தேவைகளின் நிமித்தமே நீதியையும் மனித உரிமைகளையும் கையாள்வதால் 40 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்காது தமிழர்கள் நாங்கள் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.

அரசற்ற இனமாகிய நாங்கள் எங்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்வதற்கும் அரசியல் தீர்வை அடைவதற்கும் புதியொரு போக்கில் பயணிக்கவேண்டிய அவசியத்தையே காலம் தற்போது உணர்த்தி நிற்கின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு

11 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US