ரஞ்சன் ராமநாயக்கவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை அவதூறு செய்யும் வகையில், ரஞ்சன் கருத்து வெளியிட்டரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
ரஞ்சன் ராமநாயக்கவிடம் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர். சிவில் செயற்பாட்டாளராக நாமல் குமார இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதியிடம் கோரிக்கை
இந்த விடயம் தொடர்பில் கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் ஏற்கனவே நாமல் குமாரவிடமும் விசாரணை நடத்தியுள்ளனர்.
கர்தினாலை அவமரியாதை செய்யும் வகையில் ரஞ்சன் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பான ஒலிப்பதிவுகள் தம்மிடம் உள்ளதாக நாமல் குமார தெரிவித்திருந்தார்.
நாமல் குமார தொடர்பில் விசாரணை நடத்துமாறு கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் நாமல் குமாரவிடமும் மேலும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக குற்ற விசாரணைப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
