ஹிஜாப் அணியாத நடிகைக்கு 2 வருட சிறைத்தண்டனை
பொது இடத்தில் ஹிஜாப் அணியாத ஈரான் பிரபல நடிகைக்கு இரண்டு வருட சிறை தண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் விதித்துள்ளது.
பொது இடத்தில் ஹிஜாப் அணியாமல் தலையில் குல்லாய் அணியாமல் சென்ற காரணத்துக்காக ஈரானிலுள்ள நடிகை அஃப்சனாஹ் பாயேகன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஹிஜாப் அணியாமல் பொது இடத்தில் வந்ததற்காக அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும், அஃப்சனாஹ் பாயேகன் என்ற 61 வயது நடிகைக்கு மனநிலை சரியில்லை என்று அவருக்கு வாரந்தோறும் மனோதத்துவ சிகிச்சையளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இருப்பினும் சிறையில் அவருக்கு மனோதத்துவ சிகிச்சை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tamizha Tamizha: வீட்டில் அழுக்கு நைட்டியுடன் இருக்கும் அம்மா! அலுவலகத்தில் அசிங்கப்படுத்திய மகன் Manithan
அறிவுக்கரசிக்கு தரமான பதிலடி கொடுத்த ஈஸ்வரி, ஷாக்கில் கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam