சுமூகமான சூழ்நிலையில் நோன்புப் பெருநாளை கொண்டாடும் முஸ்லிம்கள்! ஜனாதிபதி வாழ்த்து
முஸ்லிம்கள், ரமழான் மாத நோன்பை நிறைவு செய்து, நாட்டில் ஏற்பட்டுள்ள சுமூகமான சூழ்நிலையில், இந்த வருட நோன்புப் பெருநாளை கொண்டாடுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நோன்பு பெருநாளை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், இந்த மாற்றம் அனைவருக்கும் ஆறுதலாக இருக்கும் என்பது உறுதியாகும். ரமழான் காலம் மற்றும் நோன்புப் பெருநாள் என்பன மதிப்பு மிக்க மத, ஆன்மீக மற்றும் சமூக அமைப்பைக் கொண்டுள்ளன.
 
அந்த விழுமியங்களையும் பாதுகாத்து நேர்மையாக நோன்பு நோற்று முஸ்லிம்கள் தம்மை அர்ப்பணிக்கின்றனர்.
சமாதானம் மற்றும் சகோதரத்துவம் கொண்ட வளமான இலங்கையை கட்டியெழுப்புவதற்கு முன்னெடுக்கும் பணிகளின் போது, இந்த சமூகக் கோட்பாடுகள் ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருப்பதோடு அவற்றை சமூக நலனுக்காக பயன்படுத்த அனைவரும் உறுதி பூண வேண்டும் என கூறியுள்ளார். 
 
                                            
                                                                                                                                     
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர்.. வைல்டு கார்டு என்ட்ரி நடிகர் அமித் பார்கவ் பற்றி இது தெரியுமா Cineulagam
 
    
    சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        