பெண் விடுதலைப் புலி சுபாவுடன் நளினிக்கு என்ன வேலை..! ஆதாரத்தை பட்டியலிடும் முன்னாள் பொலிஸ் அதிகாரி
ராஜீவ் காந்தி கொலை சம்பவத்தின் போது மனித வெடிகுண்டை வெடிக்கச் செய்த அன்றைய இரவு நளினிக்கு அந்த இடத்தில் என்ன வேலை என முன்னாள் ஏ.டி.எஸ்.பி. (முன்னாள் பொலிஸ் அதிகாரி) அனுசுயா சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், நான் பொய் சாட்சியம் கூறியதாக நளினி கூறுகிறார். நளினி ஸ்ரீபெரும்பதூரைச் சேர்ந்தவரா?
மனித வெடிகுண்டை வெடிக்கச் செய்த அன்றைய இரவு 10.20 மணிக்கு நளினிக்கு அந்த இடத்தில் என்ன வேலை.
பத்திரிகைகளில் வெளியான புகைப்படங்கள்
பெண் விடுதலைப் புலி சுபா உடன் அவர் அமர்ந்திருந்த புகைப்படங்கள் பத்திரிகைகளின் வெளியாகியுள்ளன.
சுபாவுடன் நளினிக்கு என்ன வேலை? ஆனால் நளினி பொய் சொல்கிறார்.
விழா நடக்கும் இடத்திற்கு தான் வரவே இல்லை, இந்திரா காந்தியின் சிலைக்கு அருகிலேயே நின்று கொண்டிருந்தேன் என நளினி கூறியுள்ளார் என அனுசுயா சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் ராஜீவ் காந்தி கொலை சம்பவம் இடம்பெற்ற நிகழ்வில் பதிவு செய்யப்பட்டு பத்திரிகைகளில் வெளியான புகைப்படங்களையும் சுட்டிக்காட்டி அனுசுயா சரமாரி கேள்விகளை தொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த ராசியினர் விளையாட்டு துறையில் சாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

ரூ 78,000 கோடி சொத்து மதிப்பு... இன்னும் யாருக்கும் அவர் பெயர் தெரியாது: முகேஷ் அம்பானியுடன் நெருக்கம் News Lankasri

27 ஆண்டுக்கு முன்னர் நடந்த அதிசயம் - விமான விபத்தில் நடிகரின் உயிரை காப்பாற்றிய அதே 11A இருக்கை News Lankasri
