ராஜிவ் காந்தி கொலை வழக்கு! விடுவிக்கப்பட்ட இலங்கையர்கள் குறித்து வெளியான புதிய தகவல்
இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நான்கு இலங்கையர்களும், விடுவிக்கப்பட்டு நான்கு மாதங்கள் கடந்த போதிலும் தொடர்ந்தும் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் இலங்கைக்கு மீள திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்த சாந்தனின் ஆவணங்கள் மீதான பரிசீலனை தொடர்ந்தும் நிலுவையில் உள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வளெியிட்டுள்ளது.
1999ஆம் ஆண்டு இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இந்திய உயர் நீதிமன்றில் தண்டனை உறுதி செய்யப்பட்ட ஏழு பேரில் பேரறிவாளன் கடந்த ஆண்டு மே மாதம் விடுவிக்கப்பட்டார்.
நளினி, சாந்தன், முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் குறித்த வழக்கில் இருந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உயர் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,