ராஜிதவின் மகனுக்கு தேசிய பட்டியலில் இடம்: சஜித் மீது கடும் குற்றச்சாட்டு
எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa), தனது மகன் சதுர சேனாரத்னவுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் முதல் இரண்டு அல்லது மூன்று ஆசனங்களில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்க முன்வந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) ஆதரவளிக்கும் தீர்மானம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தீர்மானத்தை மீளப்பெறல்
இதன்போது, ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக சஜித் பிரேமதாசவிடம் கூறிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டதாகவும் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.
மேலும், ஜனாதிபதியோடு இணையும் தீர்மானத்தை மீளப்பெறுமாறு எதிர்க்கட்சித் தலைவர் தம்மிடம் கோரியதாகவும், நாட்டு நலனுக்காக சிந்தித்து இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri
