விடுதலைப் புலிகளின் தங்கத்தையும் பணத்தையும் கொள்ளையிட்ட ராஜபக்சவினர்! வெளிவரும் பல தகவல்கள்
எந்தளவுக்கு எதிர்ப்புகளை வெளியிட்டாலும் பேரணிகளை நடத்தினாலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியில் இருந்து விலகிச் செல்ல மாட்டார் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
கொள்ளையிடப்பட்ட எல்லாளனின் தங்க வண்டி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியில் இருந்து விலக மாட்டார் என்பதால், ஜனாதிபதி மாளிகையின் வாயில் கதவை உடைத்து, ஜனாதிபதி கழுத்தை பிடித்து வெளியில் தள்ள வேண்டும்.
ராஜபக்சவினர் சிவனொளிபாத மலையில் இருந்து மணியை கழற்றி விற்றனர். வரலாற்று சிறப்புமிக்க விளக்கை விற்றனர். தாது கோபுரங்களில் உள்ள புதையல்களை எடுத்தனர். எட்டு வழிப்பாட்டுதலங்களை (அட்டமஸ்தானம்) ஒன்பதாக மாற்றினர்.
எல்லாளன் பயன்படுத்திய தங்க வண்டியை கொள்ளையிட்டனர். பிரபாகரன் மறைத்து வைத்திருந்த தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையிட்டனர்.
கோட்டாபய கலியுகத்தில் அனர்த்தங்களை ஏற்படுத்த பிறந்தவன்
நாட்டை ஆட்சி செய்யும் கோட்டாபய ராஜபக்ச என்பவனுக்கு வரலாறும் தெரியாது, கலாசாரமும் தெரியாது. எதுவுமே தெரியாது.
ராஜபக்சவினருக்கு இருந்த அதிகாரங்கள் காரணமாக இராணுவத்தில் இணைந்தார், பின்னர் வடமராட்சி போரில் நாட்டை கைவிட்டு அமெரிக்காவுக்கு சென்றார்.
நானும் பெலியத்தையை சேர்ந்தவன், அவர்களும் பெலியத்தையை சேர்ந்தவர்கள். எதுவுமே இல்லாமல் இருந்தவர்களே ராஜபக்சவினர். வாழ்ந்து வந்த வீட்டையும் அடகு வைத்திருந்தனர். நண்பர்கள் அதனை மீட்டு கொடுத்தனர்.
அரசியல்வாதிகள் தெரியாதவற்றை பேச முயற்சித்து வருகின்றனர். திறமைற்ற ஆட்சியாளர், கொலைகாரன், மோசடியாளன், இலஞ்சம் பெறும், திருடனை விரட்ட வேண்டும் என்றே மக்கள் போராட்டங்களை ஆரம்பித்தனர்.
யார் இந்த திறமையற்ற, நாட்டை அழித்த ஆட்சியாளன். மிகப் பெரிய எரிபொருள் வரிசைகள், மிகப் பெரிய சமையல் எரிவாயு வரிசைகள், பால் மா வரிசைகள், நோயாளிகளுக்கு மருந்துகள் இல்லை.
இந்த அனர்த்தத்தின் காரணகர்த்தா யார்? கலியுகம், இந்த கலியுகத்தில் அனர்த்தங்களை ஏற்படுத்த ஒருவன் பிறந்தான் அவன் தான் கோட்டாபய ராஜபக்ச.
அனைவரும் கோட்டாபயவையே வெளியேறுமாறு கூறினர். இறுதியில் வெளியேறியது யார்?, மகிந்த ராஜபக்ச. அவரது அடிவருடிகள் வழங்கிய ஆலோசனை படி செயற்பட்டதால், அவர் வெளியேற நேர்ந்தது அது நல்லது.
காலிமுகத்திடலில் மாத கணக்காக இருக்கும் இளைஞர்கள் கோட்டாபய ராஜபக்சவையே வெளியேறுமாறு கூறினர். சென்றாரா?. பிள்ளைகளே என்னை போன்று ராஜபக்சவினர் பற்றி அறிந்தவர்கள் எவருமில்லை.
அவர்களை சுற்றி இருந்துகொண்டு துதிபாடுபவர்களை விட எனக்கு தெரியும். நாங்கள் இளைஞர்களாக இருந்த போதும் அவர்களுடன் இருந்தோம். ராஜபக்சவினர் எமது வீடுகளில் இருந்தனர்.
பசில் மிக மோசமான திருடன்
எனக்கு பின்னாலேயே பசில், கோட்டா போன்றவர்கள் திரிந்தனர். பசில் என்பவன் மிக மோசமான திருடன். அவனிடம் எங்கே பணம் இருந்தது.
அவன் அனுரபண்டாரநாயக்கவுடன் இருந்தவன். காமினி திஸாநாயக்கவிடம் சம்பளம் வாங்கியவன். எப்படி இவர்களுக்கு இந்த பணம் வந்தது. அமெரிக்காவில் வீடுகள், உலகம் எங்கும் வீடுகள்.
சீசெல்ஸ், டுபாய் எங்கு இவர்களுக்கு வீடுகள் இல்லை. மகிந்த ராஜபக்ச வெளியேறினார். ஏன் கோட்டாபய ராஜபக்ச வெளியேறாது இருக்கின்றார். இவன் போக மாட்டான்.
கழுத்தை பிடித்து வெளியில் தள்ளுவோம்
இவன் இருக்கும் வரை நாட்டுக்கு எந்த உதவிகளையும் வழங்க வேண்டாம் என நாங்கள் உலகத்திற்கு கூறுவோம். மோசடி, திருடன், வேலை செய்ய தெரியாதவனை அரச நாற்காலியில் வைத்துக்கொண்டு ஏன் உதவிகளை வழங்க வேண்டும்.
இவனை விரட்ட வேண்டுமாயின் பிள்ளைகளே லட்சக்கணக்கில் கொழும்புக்கு வாருங்கள். 9 மாகாணங்களிலும் இருந்து வாருங்கள். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முதல் துப்பாக்கி சூட்டை ஏற்றுக்கொள்ள நான் தலைமை தாங்குவேன்.
ஜனாதிபதி மாளிகையின் வாயில் கதவை உடைத்து, உள்ளே சென்று கழுத்தை பிடித்து இழுத்து வந்து வெளியில் தள்ளுவோம். அதற்கு முன்னர் அவன் ஹெலிக்கொப்டரில் சென்று விடுவான்.
இதில் எவரும் இறக்கலாம், நாம் உயிரை தியாகம் செய்வோம். எமது நாட்டு பிள்ளைகள், படையினர் நாட்டுக்காக உயிர்களை தியாகம் செய்தனர் எனவும் மேர்வின் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.