மட்டக்களப்பில் மழையுடனான காலநிலை: வாகன சாரதிகளை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்
மட்டக்களப்பில் மழையுடனான காலநிலை நிலவுவதன் காரணமாக வாகன சாரதிகளை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையத்தில் நேற்று(15) இரவு வாகனம் ஒன்று வீட்டு மதிலை உடைத்துக்கொண்டு சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியூடாக குருணாகலில் இருந்து அம்பாறை மருதமுனைக்கு சென்றுகொண்டிருக்கும்போதே வேக கட்டுப்பாட்டை இழந்து மதிலை உடைத்துக்கொண்டு சென்றுள்ளது.
மருதமுனை வெதுப்பகம் ஒன்றிற்கு சொந்தமான குறித்த வாகனத்தில் இருந்தவர்கள் தெய்வாதீனமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லையென பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பான விசாரணை
இந்த விபத்து காரணமாக வீட்டு மதிலும் வீட்டின் சில உடமைகளுக்கும் சேத மேற்பட்டுள்ளதுடன் லொறியின் முன்பகுதியும் சேதமடைந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இப்பிரதேசத்தில் மழையுடனான வானிலை நிலவி வரும் நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
ஒரு REEL-க்கு ரூ. 76 லட்சம் சம்பளம்.. ஓரியின் வருமானத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் Cineulagam
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri