மட்டக்களப்பில் மீண்டும் மழை - வெள்ளத்தில் மூழ்கிய பல பகுதிகள்
வடகீழ் பருவப்பெயர்ச்சி மழை தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாகப் பெய்து வருகின்றது.
இதனால் மாவட்டத்திலுள்ள தாழ் நிலங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளதுடன், அவ்வாறு தேங்கியுள்ள வெள்ளநீர் முறையான வடிகானின்றி வழிந்தோட முடியாதுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
சிரமங்களை எதிர்நோக்கும் மக்கள்
கிராமங்களின் உள் வீதிகளில் இவ்வாறு வெள்ள நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களும், மாணவர்களும் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும், இந்த நிலைமையால் தொற்றுக்கள் ஏற்படும் அபாயம் நிலவுவதாகவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வருடம் ஆரம்பத்திலிருந்து இதுவரையில் 1809.5 மில்லி மீற்றர் மழை விழ்ச்சி பதிவாகியுள்ளது.
மழைவீழ்ச்சி பதிவு
இன்று (19.12.2025) காலை 8.30 மணிவரையில் கடந்த 24 மணித்தியாலங்களில் நவகிரிப் பகுதியில் 19 மில்லி மீற்றர், தும்பங்கேணி பகுதியில் 32 மில்லி மீற்றர், மைலம்பாவெளி பகுதியில் 53.5 மில்லி மீற்றர், கட்டுமுறிவு பகுதியில் 42 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது.
இந்நிலையில் மாவட்டத்திலுள்ள பழுகாமம், வெல்லாவெளி, வவுணதீவு, பட்டிப்பளை, களுதாவளை, களுவாஞ்சிகுடி, குருமண்வெளி உள்ளிட்ட பல இடங்களிலுள்ள சிறிய குளங்கள் நிரம்பி வழியும் நிலை காணப்படுவதாக தெரியவருகிறது.










சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri