கொழும்பு கோட்டை- மாலபே இடையிலான இலகு தொடருந்து திட்டம்!
கொழும்பு கோட்டை- மாலபே இடையிலான இலகு தொடருந்து திட்டத்தை மீண்டும் முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கான மாற்றுப் பிரேரணைகளைப் பெற்றுக் கொள்வதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அமைச்சரவைப் பத்திரமொன்றைச் சமர்ப்பித்துள்ளார்.
கொழும்பு மற்றும் அண்டிய பிரதேசங்களில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெருக்கடியைத் தணிக்கும் வகையில் இந்த இலகு தொடருந்து திட்டம் முன்மொழியப்பட்டிருந்தது. எனினும் கடந்த கோட்டாபய அரசாங்கம் அதனை இடைநிறுத்தியிருந்தது.

பல்லாயிரக்கணக்கான அரச ஊழியர்கள் கொழும்பு-மாலபே இடையே பயணிக்கும் நிலையில் உத்தேச தொடருந்து போக்குரவத்தின் ஊடாக அவர்களுக்குப் பணம் மற்றும் நேரத்தைச் சேமித்துக் கொள்ள முடியும் என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam