கொழும்பு கோட்டை- மாலபே இடையிலான இலகு தொடருந்து திட்டம்!
கொழும்பு கோட்டை- மாலபே இடையிலான இலகு தொடருந்து திட்டத்தை மீண்டும் முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கான மாற்றுப் பிரேரணைகளைப் பெற்றுக் கொள்வதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அமைச்சரவைப் பத்திரமொன்றைச் சமர்ப்பித்துள்ளார்.
கொழும்பு மற்றும் அண்டிய பிரதேசங்களில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெருக்கடியைத் தணிக்கும் வகையில் இந்த இலகு தொடருந்து திட்டம் முன்மொழியப்பட்டிருந்தது. எனினும் கடந்த கோட்டாபய அரசாங்கம் அதனை இடைநிறுத்தியிருந்தது.

பல்லாயிரக்கணக்கான அரச ஊழியர்கள் கொழும்பு-மாலபே இடையே பயணிக்கும் நிலையில் உத்தேச தொடருந்து போக்குரவத்தின் ஊடாக அவர்களுக்குப் பணம் மற்றும் நேரத்தைச் சேமித்துக் கொள்ள முடியும் என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan